ஆப்நகரம்

விமானம் மூலம் வந்திறங்கிய இதயம் மற்றும் கிட்னி… தனியார் மருத்துவமனையிடம் ஒப்படைப்பு!

ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரையிலிருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு வந்தது இரண்டு கிட்னிகள் மட்டும் இரண்டு இதயங்கள்.

Samayam Tamil 18 Jan 2022, 9:02 pm

ஹைலைட்ஸ்:

  • மதுரையில் 2 இதயம், 2 கிட்னிகள் தானம்
  • ஏர் - இந்தியா விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது
  • சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மதுரையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் இருந்து 2 இதயம், 2 கிட்னிகள் தானமாக பெற்று, சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இந்த பூமியில் வாழும் சில மனிதர்கள் தாங்கள் உயிருடன் இருக்கும் வகையில் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏழை, எளியவர்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் கொடுத்து புண்ணியம் சேர்த்து வருகின்றனர்.

ஆனால் இவற்றை விட மிகப்பெரிய புண்ணியத்தையும் சிலர் செய்து வருகின்றனர். அது தான் உடல் உறுப்புகள் தானம். ஒருவர் இறந்த பிறகும் அவரது உடல் உறுப்புகள் பலரை வாழச் செய்து வருகிறது.

அரசு பேருந்து ஓட்டுனரை கம்பியால் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்… போராட்டத்தில் குதித்த போக்குவரத்து ஊழியர்கள்!

அவ்வகையில் மதுரையில் உள்ள இரண்டு பிரபல தனியார் மருத்துவமனைகளிலிருந்து இருந்து உடல்
உறுப்புகள் தானமாக, 2 இதயம் மற்றும் 2 கிட்னிகள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு மதுரை விமான
நிலையத்திலிருந்து, ஏர் - இந்தியா விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

தானமாக பெற்ற உடல் உறுப்புகள் உறவினர்கள் மூலம் ஏர் - இந்தியா விமானம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அடுத்த செய்தி