ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு களத்தில் கருப்புக் கொடியுடன் வேளாண் சட்ட போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்திற்குள் கோஷமிட்டு கருப்பு கொடி காட்டிய மாடுபிடி வீரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 14 Jan 2021, 2:02 pm
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களாக வந்தவர்கள் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த வினோத், அவனியாபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆவர்.
Samayam Tamil ஜல்லிக்கட்டு வீரர்கள் களத்தில் கருப்புக் கொடியுடன் பாஜகவை எதிர்த்து போராட்டம்!
ஜல்லிக்கட்டு வீரர்கள் களத்தில் கருப்புக் கொடியுடன் பாஜகவை எதிர்த்து போராட்டம்!


இவர்கள் இருவரும் வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகளாக உள்ளனர். இந்த சூழலில், இவர்கள் 2 பேரும் போட்டியில் பங்கேற்றிருந்த நேரத்தில் களத்தில் நின்றபடி, தாங்கள் மறைத்து வைத்திருந்த கருப்புக் கொடியை எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதாவது, அவனியாபுரம் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடியைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 வயது சிறுமிக்கு கட்டுப்பட்டு களத்துக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

அடுத்த செய்தி