ஆப்நகரம்

ஜெ. நினைவு தினம்... மொட்டையடித்த 26 பேர்

20 ஆண்கள் 6 பெண்கள் என 26 பேர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துக் கொண்டனர்.

Samayam Tamil 5 Dec 2020, 8:43 pm
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா திருக்கோவிலில் அ.தி.மு.க.வினர் சார்பாக 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் தங்களது அஞ்சலியை செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்து கொண்டனர்.
Samayam Tamil மொட்டையடித்தவர்கள்


மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு கோவில் அமைத்து அ.தி.மு.க.வினர் சுவாமி கும்பிடுவது போல வழிபாடு செய்து வருகின்றனர்.

இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அந்த கோவிலில் கோவிலின் நிர்வாகி MGR நாகராஜன் தலைமையில் 20 ஆண்கள் 6 பெண்கள் என 26 பேர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துக் கொண்டனர்.

முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருக்கோவில் நிர்வாகி MGR நாகராஜன் மதுரை தெற்கு இரண்டாம் பகுதி கழக செயலாளர் ஜோசப் தனிஸ்லால் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அடுத்த செய்தி