ஆப்நகரம்

10 நாட்களில் மூன்று உயிர்கள்... அடுத்தடுத்து நடக்கும் கோர விபத்துகள்

கடந்த ​​பத்து நாட்களில் மூன்று பேர் உடல் சிதைந்து பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 24 Nov 2020, 12:25 pm
உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக, ஒரு வழிப்பாதையாக மாற்றபட்ட சாலையில், அடுத்தடுத்து அரங்கேறும் விபத்துக்களால் மதுரை பாண்டி கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கட்டப்டும் பாலம்


மதுரை விரகனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் மற்றும் மணிகண்டன். இருவரும் இரவு பணி முடித்துவிட்டு அதிகாலை பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் வந்தகொண்டிருந்துள்ளனர். அந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்தப் பகுதி ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு வழிப்பாதையில் இவர்கள் எதிர்திசையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனிக்காத சரக்கு வாகனம் ஒன்று இவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில்,இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நாகராஜன் இதில் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

தங்க முகக் கவசம் அணிந்த முதல் தமிழர் வரிச்சியூர் செல்வம்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அந்த பகுதியை உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியின் காரணமாக அந்த பகுதியே சாலையை முறையாக ஒழுங்குபடுத்தாத காரணத்தால், அந்தப் பகுதியில் கடந்த 10 நாட்களில் ஐந்திற்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளனர்,ஐந்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி