ஆப்நகரம்

“ஜோசப் விஜய் எனும் நான்” மதுரையில் நடிகர் விஜய் அரசியல் எண்டிரிக்கு பெரும் அழைப்பு!

2021ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நல்ல தேர்வு-நீங்கள்தான் தமிழ்நாட்டின் இறுதி தீர்வு என நடிகர் விஜயை முதல்வராக சித்தரித்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு.

Samayam Tamil 19 Oct 2021, 8:59 pm
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் குறிப்பிடத்தகுந்த அளவில் வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.
Samayam Tamil “ஜோசப் விஜய் எனும் நான்” மதுரையில் நடிகர் விஜய் அரசியல் எண்டிரிக்கு பெரும் அழைப்பு!


தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுமையாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு ஃபோட்டோ வைத்து மதுரையில் மோசடி: அதிர வைக்கும் சம்பவங்கள்!
இந்த வெற்றியை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி பரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சுவரொட்டியில் நடிகர் விஜய் முதல் அமைச்சராக பதவியேற்பது போல் சித்தரித்து, 2031 ஆம் ஆண்டு ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி கூறுகிறேன் என பிரமாணம் எடுப்பது போன்ற வாசகங்களும், 2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு- நீங்கள் தான் தமிழ்நாட்டின் இறுதி தீர்வு என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி