ஆப்நகரம்

திருப்பரங்குன்றம் காய்கறி மார்க்கெட் இனி 24மணி நேரமும் செயல்படும்!?

திருப்பரங்குன்றம் பழமைவாய்ந்த காய்கறி மார்க்கெட் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மின் வசதி ஏற்படுத்தி தருவேன் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தேர்தல் வாக்குறுதி.

Samayam Tamil 22 Mar 2021, 2:20 pm
இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ராஜன் செல்லப்பா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil rajan chellappa


அப்போது திருப்பரங்குன்றம் காவல் நிலையம் அருகே உள்ள கிராம விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்தும் பழமைவாய்ந்த காய்கறி மார்க்கெட்டில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் நுழைந்த அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அங்கு இருந்த கடைகாரர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா கூறுகையில்,

பழமை வாய்ந்த இந்த காய்கறி சந்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மின்வசதி ஏற்படுத்தி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி செயல்படுத்துவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

அடுத்த செய்தி