ஆப்நகரம்

சசிகலா வந்தாலும் என் ஓட்டு எடப்பாடிக்குதான்... மூத்த அமைச்சர் பளிச் பேச்சு!

அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை வரவேற்கின்றனர். இனிமேல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருந்து உழைப்போம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Samayam Tamil 20 Jan 2021, 3:29 pm
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
Samayam Tamil அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை ஆரப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு


அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் 2 கோடியே 8 லட்சம் ரேஷன் கார்டுகளில்கடந்த 13 ஆம் தேதி வரை 2 கோடியே 4 லட்சம் குடும்பங்கள் பொங்கல் பரிசை வாங்கிவிட்டனர். அதாவது நேற்று வரை 98.50 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல மதபோதகர் வீடு, அலுலகங்களில் ஐடி ரெய்டு!

திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடியுமா?,ஆய்வு செய்யவிட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றினார்களா? என்பதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.

சசிகலா வருகையால் முதல்வர் ஆட்டம் காண்பார் என்று ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் எதைத்தான் சொல்லவில்லை. அவர் சொல்வதே அவச்சொல் தான். நாங்கள் எல்லோரும் இணக்க உறவோடு தான் இருக்கிறோம். ஜெயலலிதா இருந்தபோதும் சுமூகமான உறவோடு தான் இருந்தோம்.

வாக்காளர் பட்டியல் ரிலீஸ்... மதுரை கலெக்டருடன் மல்லுக்கட்டிய எதிர்க்கட்சியினர்!

அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை வரவேற்கின்றனர். எதிர்வரும் தேர்தலிலும் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருந்து உழைப்போம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அடுத்த செய்தி