ஆப்நகரம்

எய்ட்ஸ் நிதி ஊழல் மத்திய, மாநில அரசுகள் பதில் தரணும்: ஐகோர்ட்!

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் நிதி முறையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசும் சிபிஐ-உம் பதிலளிக்க உத்தரவிட்டு 2 வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Samayam Tamil 14 Dec 2020, 6:09 pm
மதுரையைச் சேர்ந்த ரோப்சிங் ராபின்சிங் ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “இந்திய அரசால் 1992ஆம் ஆண்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு(NACO) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதுமிருந்து கோடிக் கணக்கில் பணம் நிதியாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil எய்ட்ஸ் நிதி ஊழல் மத்திய, மாநில அரசுகள் பதில் தரணும்: ஐகோர்ட்!
எய்ட்ஸ் நிதி ஊழல் மத்திய, மாநில அரசுகள் பதில் தரணும்: ஐகோர்ட்!


இந்த நிதிகள் எய்ட்ஸ் நோயைக் கட்டுப் படுத்துவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் குழுவிற்குக் கிடைக்கும் நிதிகளைப் பகிர்ந்து கொடுத்து எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

ஐஏஎஸ் படிக்காமல் கஞ்சா, சூழலை உருவாக்கியது அரசு: ஐகோர்ட்!

ஆனால் ஏய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. முறையான கணக்குகள் பராமரிக்கப்படுவதில்லை. எனவே எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் நிதிகளை சிபிஐ மூலம் முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து சிபிஐ மற்றும் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

அடுத்த செய்தி