ஆப்நகரம்

நடக்குமா அலங்காநல்லூர் ஜல்லிகட்டு?: இனிதான் தெரியும்!

மதுரை அலங்காநல்லூரில் 2021ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் எந்த வித தடையுமின்றி நடை பெற அனுமதிக்க வேண்டும் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவினர் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Samayam Tamil 11 Dec 2020, 1:40 pm
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
Samayam Tamil நடக்குமா அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இனிதான் தெரியும்!
நடக்குமா அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இனிதான் தெரியும்!


இதற்கிடையே தற்போது தமிழ்நாட்டில் கொரோனா 144 தடை உத்தரவு உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி தடைப்படாமல் வழக்கம் போல் வரும் 2021ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் அதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அரசிடம் முறையிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு கூறும் வழிகாட்டுதல் படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் அமைதியான முறையில் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் வனிதா அவர்களிடம் மனு அளித்தனர்.

முதல்வர் கார் முன் பாய்ந்து பெண் பொய் பாலியல் புகார்!

ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து விழா நடத்துவது குறித்து நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் விழா குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி