ஆப்நகரம்

சிறுமிகளைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை அதிகரிப்பு: அலங்காநல்லூரில் இப்போது!

மதுரை அலங்காநல்லூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 18 Dec 2020, 4:27 pm
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள உள்ள காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு. வயது 22. டிப்ளமோ படித்து முடித்துள்ளார். வேலைக்குச் செல்லவில்லை என்றும் ஊர் சுற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
Samayam Tamil சிறுமிகளைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை அதிகரிப்பு: அலங்காநல்லூரில் இப்போது!
சிறுமிகளைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் தொல்லை அதிகரிப்பு: அலங்காநல்லூரில் இப்போது!


இந்த சூழலில், வல்லரசு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார் எனக் கூறப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து வல்லரசு, தான் திருமணம் செய்த சிறுமியைத் திண்டுக்கல் அருகே தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தகவல் வெளியானது.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடி வந்த போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.

2 ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் வந்த மகள்... அழுது கதறிய பெற்றோர்

மாணவி திண்டுக்கல் பகுதியிலிருந்ததை அறிந்த மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வாலிபர் வல்லரசைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து வாலிபர் வல்லரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுரையில் சிறுமிகளைக் காதலித்து திருமணம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அடுத்த செய்தி