ஆப்நகரம்

வாடிவாசல் போராட்ட காதல்: திருமணத்திற்குத் தடையாக முதல்வர், துணை முதல்வர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியன்று வாடிவாசல் முன்பு எளிமையாகத் திருமண உறுதியேற்பு எடுத்துக் கொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் காதல் ஜோடி ஒன்று மனு அளித்துள்ளது.

Samayam Tamil 11 Jan 2021, 8:46 pm
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். எழுத்தாளர். மதுரையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் வித்யாதரணி. இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சந்தித்துள்ளனர். காலப்போக்கில் அது காதலாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
Samayam Tamil வாடிவாசல் போராட்ட காதல்: திருமணத்திற்குத் தடையாக முதல்வர், துணை முதல்வர்!
வாடிவாசல் போராட்ட காதல்: திருமணத்திற்குத் தடையாக முதல்வர், துணை முதல்வர்!


இந்த காதல் ஜோடி தங்களது வாழ்வில் ஆடம்பரத்தைத் துறந்து தற்சார்பு வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். குறிப்பாக இந்த திருமணம் விழாவிற்கு முன்பாக திருமணம் செய்ய உறுதி ஏற்கும் நிகழ்வை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தினத்தில் நடத்த இவர்கள் ஆசைப்படுகின்றனர்.

இதையடுத்து கார்த்திகேயன் தங்களின் இந்த ஆசையை ஜல்லிக்கட்டு குழுவிடம் எடுத்துக் கூறி, போராட்டத்தில் தொடங்கிய காதல் என்பதையெல்லாம் விளக்கிக் குறிப்பிட்ட போட்டி நடக்கும் இடத்தில் திருமண உறுதி ஏற்பு நிகழ்வுக்கு அனுமதி கோரியுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... டோக்கன் வாங்க வந்தோருக்கு தடியடி

இவர்களின் கோரிக்கையைக் கேட்ட ஜல்லிக்கட்டு குழு, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கார்த்திகேயன்-வித்யாதரணி ஜோடி, தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் மனுவாக வழங்கினர்.

இதற்கிடையே இந்த ஆண்டு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்க உள்ளதால் காதல் ஜோடியின் உறுதியேற்பு கனவு நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காதல் தோன்றிய அதே இடத்தில் இந்த காதல் ஜோடி திருமணத்திற்குச் செல்ல வாய்ப்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்போடு இந்த ஜோடி காத்துக் கிடக்கின்றனர்.

அடுத்த செய்தி