ஆப்நகரம்

ஆம்புலன்சில் வந்திறங்கி ஓட்டுப் போட்ட மதுரை பாட்டி!

சிகிச்சையைப் பற்றியெல்லாம் கவலைப்படாம்ல் தில்லாக ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட மதுரை பாட்டியின் செயல் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Samayam Tamil 6 Apr 2021, 2:14 pm
மதுரையில் மூதாட்டி ஒருவர் தனது உடல் நலனை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆம்புலன்சில் வந்து ஓட்டுப் போட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Samayam Tamil ஆம்புலன்சில் வந்திறங்கி ஓட்டுப் போட்ட மதுரை பாட்டி!


மதுரையைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி அம்புலன்ஸில் வந்து வாக்களித்தார். மதுரை ஆரப்பாளையம் டி.டி சாலையில் வசித்து வருபவர் இராஜமாணியம்மாள். வயது 86.

இராஜமாணியம்மாள் சமீப காலமாக உடல் நலக் குறைவு காரணமாகச் சற்று ஆரோக்கியம் குன்றி காணப்படுகிறார்.

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கே போக்கு காட்டிய வாக்குப்பதிவு இயந்திரம்!

இதையடுத்து அவருக்கு வீட்டிலே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தனது ஜனநாயக கடமையாற்ற வேண்டி தனது குடும்பத்தார் உதவியுடன் அம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து வாக்குச் சாவடி சென்றார்.

அங்குத் தள்ளுவண்டி உதவியோடு வாக்குச்சாவடிக்குள் நுழைந்து இராஜமாணியம்மாள் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அடுத்த செய்தி