ஆப்நகரம்

மகனுக்குப் பயந்து கலெக்டர் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

சொத்துக்காக பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வீட்டை விட்டு துரத்திய மகனின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்...

Samayam Tamil 30 Sep 2020, 10:39 pm
மதுரையில் பெற்ற மகன் சொத்துக்களைக் கேட்டுச் செய்த சித்திரவதை காரணமாகப் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மகனுக்குப் பயந்து கலெக்டர் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!
மகனுக்குப் பயந்து கலெக்டர் முன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி!


மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள ஈரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். வயது 63. மனைவி பெயர் பொண்ணு. வயது 60. இவர்களுக்குச் சந்திர சேகர் என்ற மகன் உள்ளார்.

பாண்டியன் பெயரில் அதிகளவில் சொத்துகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை இப்போதே தனக்கு எழுதித் தரவேண்டும் எனப் பல காலமாக சந்திரசேகர் தனது தந்தையைச் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில் பாண்டியன் தனது சொத்துக்கள் அனைத்தையும் பேரக் குழந்தைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். இதை ஏற்க முடியாத சந்திரசேகர் தனது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டிலிருந்து அவர்களைத் துரத்தி அனுப்பியுள்ளார். இதன் காரணமாகப் பாண்டியன் தம்பதியினர் தங்களுக்குச் சொந்தமான தோட்ட வீட்டில் தங்கி உயிர் வாழ்ந்து வந்துள்ளனர்.

அப்போதும் அடங்காத சந்திரசேகரின் சொத்தாசை, உடனடியாக அனைத்து சொத்துக்களையும் தனது பெயரில் எழுதித் தரவேண்டும் என வற்புறுத்தி பாண்டியனுக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்த 20 தென்னை மரங்களை வெட்டி சாய்த்துள்ளார். மேலும், தோட்டத்தில் உள்ள அனைத்தையும் அழித்து விடுவேன் எனப் பாண்டியனுக்கு, சந்திரசேகர் மிரட்டலும் விடுத்துள்ளார்.

வரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்!

இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பாண்டியன் தம்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பாண்டியன் தம்பதியினரிடம் விசாரணை நடத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகத் துரித விசாரணை நடத்தும்படி மாவட்ட எஸ்பி சுஜித் குமாருக்கு மதுரை ஆட்சியர் உத்தரவு ஒன்றையும் பிறபித்துள்ளார்.

அடுத்த செய்தி