ஆப்நகரம்

பொங்கலன்று மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சலசலப்பு: அரசு முடிவு என்ன?

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை முதல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Samayam Tamil 3 Jan 2021, 12:22 pm
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த முறை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனப் பெரும்பான்மை கோரிக்கை எழுந்துள்ளது.
Samayam Tamil பொங்கலன்று மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சலசலப்பு: அரசு முடிவு என்ன?
பொங்கலன்று மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சலசலப்பு: அரசு முடிவு என்ன?


அவனியாபுரத்தில் தை முதல் நாளன்று ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக விழா கமிட்டியினர் இடையே ஒற்றுமை இல்லாத சூழல் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு தனி நீதிபதி தலைமையில் அரசே முன்னின்று நிகழ்ச்சியை நடத்தியது. இதனையடுத்து இந்த ஆண்டும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக மேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில் அவனியாபுரம் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடைபெற்றது.

கருப்பு ஆடு கறி சோறு, அனுமதி இலவசம்: ஆண்களுக்கு மட்டுமே!

கூட்டத்தில் விழாவை ஒருங்கிணைத்து நடத்துவது தொடர்பாக 7 பேர் கொண்ட விழா கமிட்டி ஏற்படுத்தி அதன்மூலம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே 7 பேர் விழா கமிட்டி அமைப்பதற்குக் கிராம பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அரசே முன்னின்று இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனால் சமாதான கூட்டத்தில் முடிவு எட்டப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி