ஆப்நகரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கமிட்டி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி உறுப்பினர்கள் அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Authored bySM Prabu | Samayam Tamil 29 Dec 2022, 4:13 pm
மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன், கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்படாதால், கிராம நிர்வாக அலுவலக வாயிலில் கிராம கமிட்டியினர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil சட்ட ஆலோசகர் அன்பரசு
சட்ட ஆலோசகர் அன்பரசு


தைப்பொங்கல் அன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் அமைதி கூட்டம் நாளை (30.12.2022) மேலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் நடைபெறுகிறது. இந்த அமைதி கூட்டத்தில் அவனியாபுரம் பகுதியில் இல்லாத நபர்களுக்கும், இறந்தவர்களும் உள்ளதால் அவர்களை நீக்கி புதிய கிராம கமிட்டி அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்யாமல் சென்ற வருடம் இடம்பெற்ற நபர்களே பட்டியலில் இந்த முறையும் இடம் பெற்று இருப்பதாக கூறி, அதனை மாற்றக்கோரி அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்ந்து, மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி, அவனியாபுரம் கிராம வருவாய் ஆய்வாளர் பிருந்தா மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்படாடு ஏற்படாததால் கிராம கமிட்டி உறுப்பினர்கள் அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுத்தால் உரிமம் ரத்து - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை!
இது குறித்து அவனியாபுரம் கிராம கமிட்டி சட்ட ஆலோசகர் அன்பரசு கூறுகையில், “அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனு மீது விசாரணைக்கு அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அமைதி கூட்டத்திற்கான குழு உறுப்பினர்களை அறிவித்துள்ளனர். அதில் இறந்த உறுப்பினர்கள் மற்றும் கிராம கமிட்டிக்கு சம்பந்தமில்லாதவர்கள் பெயர் இருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இது குறித்து தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கிராம கமிட்டி அமைக்கவும் ஏற்பாடு செய்யும்வரை தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.” என கூறினார்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி