ஆப்நகரம்

திறந்தது 18ஆம் படி கருப்பசாமி கதவுகள்: மதுரை அழகர்கோவிலில் சிறப்பு வழிபாடு!

மதுரை அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வில், காவல் தெய்வமான கருப்பசாமி கோயில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Samayam Tamil 25 Jul 2021, 1:46 pm
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருவிழாவான காவல் தெய்வமான 18ஆம் படி கருப்பசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
Samayam Tamil திறந்தது 18ஆம் படி கருப்பசாமி கதவுகள்: மதுரை அழகர்கோவிலில் சிறப்பு வழிபாடு!


தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக விளக்கக்கூடிய அழகர் கோவில் பகுதியில் உள்ள கள்ளழகர் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் விழாக்கள் பிரசித்தி பெற்றது.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோயிலின் கதவுகள் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே(ஆடி அமாவாசை மற்றும் ஆடிப் பௌர்ணமி) திறக்கப்பட்டு பூசைகள் நடத்தப்படும். அதன்படி ஆடி, பவுர்ணமி தினத்தில் 18அம் படி கருப்பசாமி கோயில் கதவுகள் திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்குச் சிறப்புப் பூசை நடத்தப்பட்டன.

மதுரை காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம்: மற்றொரு அதிர்ச்சி!
அதனைத் தொடர்ந்து கதவுகள் மூடப்பட்டு கதவுகளில் சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 18ஆம் படி கருப்பண்ணசாமிக்கு சிறப்புப் பூசைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி அனிதா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி