ஆப்நகரம்

பென்சில் இல்லை... 11, 12 வயது சகோதரிகள் ஆற்றில் குதித்து தற்கொலை!

மதுரையில் சிறுமிகள் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. படிக்கப் பேனா, பென்சில் இல்லை எனத் தற்கொலை என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 8 Dec 2020, 3:17 pm
படிக்கப் பேனா, பென்சில் உள்ளிட்டவற்றைப் பெற்றோர் வாங்கி தராத காரணத்தால் சிறுமிகள் 2பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசாரிடம் பெற்றோர் அதிர்ச்சி தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil பென்சில் இல்லை... 11, 12 வயது சகோதரிகள் ஆற்றில் குதித்து தற்கொலை!
பென்சில் இல்லை... 11, 12 வயது சகோதரிகள் ஆற்றில் குதித்து தற்கொலை!


மதுரை ஆரப்பாளையம் அருகே மறவர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த முருகன்-முத்து தம்பதி. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் இருந்தன. மூத்த பெண் குழந்தைகளான சுஜி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் ஆரப்பாளையம் மற்றும் எல்ஐசி பாலம் அருகே வைகை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காகக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 2 குழந்தைகளும் பெற்றோர்களிடம் படிப்பதற்காகப் பேனா மற்றும் பென்சில் கேட்டுள்ளனர்.

கடன் தொல்லை மகளைக் கொன்ற தந்தை: மனைவி போலீசில் புகார்!

பெற்றோர் அதை வாங்கித்தர போதிய வசதி இல்லாத நிலையில் சிறுமிகளின் கோரிக்கைகளை மறுத்து வந்துள்ளனர். இதையடுத்து ஆற்றில் குழிக்க செல்வதாகப் பெற்றோர்களிடம் கூறிவிட்டு அந்த சிறுமிகள் புறப்படு சென்றுள்ளனர்.

இதையடுத்து அப்போது சிறுமிகள் 2 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தார்களா என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பேனா, பென்சில்க்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி