ஆப்நகரம்

பிணம் தின்னும் அரசியல் செய்கிறது திமுக... பாஜக கடும் விமர்சனம்!!

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 17 Sep 2020, 12:21 am
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் 70-அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஏற்றி வைத்து ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
Samayam Tamil ponnar


நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனைக்குறியது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணம் தின்னும் கழுகுகளை போல் அலைகின்றனர். அரசியல் கட்சியினருக்கு குழப்பம் இருப்பது நீட் தேர்வு குறித்து இல்லை. 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து தான் அவர்களுக்கு குழப்பம்.

எனவே மாணவர் சமுதாயம் இவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி வருகின்றனர். மூன்று தலைமுறையாக திமுக பிணம் தின்னும் அரசியல் செய்து வருகிறது.

சரக்கு விற்கும் அரசு, மணல் விற்காதா?- ஐகோர்ட் கிளை கேள்வி!

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறுவதன் மூலம், நீட் தேர்வு குறித்து முடிவு செய்வது மாநில முதல்வரா அல்லது நாட்டின் பிரதமரா என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெரிகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுகவினர், மாநிலத்தில் நடைபெறும் பிரச்சனைகளை முன்வைத்தனர் என்றால் பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் பேசாமல் இருப்பதே நல்லது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அடுத்த செய்தி