ஆப்நகரம்

அண்ணன் பிணம் மீது ஏறி நின்று சமைத்து சாப்பிட்ட தங்கை: மதுரையில் பெரும் சோகம்!

அழுகிய அண்ணன் உடல் மீது ஏறி நின்று சமைத்துச் சாப்பிட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையின் அறியாமை மதுரை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Jun 2021, 11:03 am
மதுரை மாவட்டத்தில் சகோதரன் உயிரிழந்தது தெரியாமல் துர்நாற்றத்துடன் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil அண்ணன் பிணம் மீது ஏறி நின்று சமைத்து சாப்பிட்ட தங்கை: மதுரையில் பெரும் சோகம்!


மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயச்சந்திரன். வயது 65. இவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி(55) வசித்து வந்துள்ளார். சுப்புலட்சுமி மனநலம் குன்றியவர்.

இந்த சூழலில் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அண்ணன் ஜெயச்சந்திரன் சுப்புலட்சுமி கண் முன்னே வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை உணராத தங்கை சுப்புலட்சுமி அண்ணன் தூங்குவதாக நினைத்துக் கொண்டிருந்துள்ளார்.

மதுரை மீனாட்சி கோயில் யானைக்குத் தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை: விமானத்தில் உதவி!
தொடர்ந்து ஜெயலட்சுமி அண்ணனின் உடல் மேல் ஏறி நின்றபடி சமையல் செய்து வாழ்ந்து வருகிறார். உடல் அழுகத் தொடங்கியதால் அக்கம்பக்கத்தில் வசித்து வந்தவர்கள் போலீசார் தகவல் அளித்தனர்.

இதையடுத்து கதவை உடைத்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர் வீட்டினுள் நுழைந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் ஜெயசந்திரன் பலியானது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி