ஆப்நகரம்

மாட்டுவண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்த மாடுகள்: பார்வையாளர்கள் உற்சாகம்!

மேலூர் அருகே ரேக்ளா ரேஸ் நண்பர்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்

Authored bySM Prabu | Samayam Tamil 3 Dec 2022, 2:03 pm
மேலூர் அருகே ரேக்ளா ரேஸ் நண்பர்கள் சார்பாக நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 17 ஜோடி மாடுகள் பங்கேற்று பந்தைய தூரத்தை சீறிப்பாய்ந்து கடந்ததை கண்டு பார்வையாளர்கள் உற்சாகமாகடைந்தனர்.
Samayam Tamil மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம்


மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவில் ரேக்ளாரேஸ் நண்பர்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தெற்குதெரு - திருவாதவூர் சாலையில் பெரியமாடு மற்றும் சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், பெரியமாட்டிற்கான 12 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரிவில் 7 ஜோடி மாடுகளும், சின்னமாட்டிற்கான 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரிவில், 12 ஜோடி மாடுகள் என 17 மாட்டுவண்டிகள் பங்கேற்று பந்தய தூரத்தை சீறி பாய்ந்து கடந்து வந்தது.

இதில் பெரியமாடு பிரிவில் குருத்தூர் பாண்டியராஜன் மாடு முதல் பரிசும், உலகுபிச்சான்பட்டி ரமேஷ்ராஜா மாடு இரண்டாவது பரிசும், மாங்குளம் தெய்வேந்திரன் மாடு மூன்றாம் பரிசும் பெற்றது. அதேபோல் சின்னமாடு பிரிவில் பூலாங்குளம் தொட்டசியம்மன் மாடு முதல் பரிசும், திருவாதவூர் எஸ்.எம் பிரதர்ஸ் மாடு இரண்டாம் பரிசும், ஒக்கூர் முத்துலெட்சுமி மாடு மூன்றாம் பரிசும் பெற்றது.

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்!
வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுதொகை மற்றும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டி பந்தையத்தினை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் நின்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எம்.ஏ ரேக்ளாரேஸ் குழு நண்பர்களும், மாட்டுவண்டி பந்தைய உரிமையாளர்களும் செய்திருந்தனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி