ஆப்நகரம்

அமைச்சர் செல்லூர் ராஜு கார் விபத்தில் செய்த செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

நான்கு வழிச் சாலையில் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிக் கொண்ட அமைச்சருடன் வந்த . இதனால் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 10 Dec 2020, 7:34 pm
கூட்டுறவுத்துறை அமைச்சர் உடன் வந்த கார் மேலூர் நான்கு வழிச்சாலையில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்தச் சம்பவத்தை அடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்துவிட்டுதான் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட சென்றார்.
Samayam Tamil car went with minister sellur raju met accident affected family travelled with other car
அமைச்சர் செல்லூர் ராஜு கார் விபத்தில் செய்த செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!



அமைச்சர் உடன் சென்ற கார் விபத்து...

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு நான்கு வழிச்சாலையில் மேலூரிலிருந்து மதுரை நோக்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு காரில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று கொண்டிருந்தார்.

சிறிது நேரம் பரபரப்பு...

இந்த பயணத்தின்போது அமைச்சருடன் சில கார்களும் சென்று கொண்டிருந்தது. அப்போது அமைச்சருடன் பின்னால் வந்த கட்சி நிர்வாகி ஒருவரின் கார் பரமக்குடி நோக்கி குடும்பத்தாருடன் வந்த காரில் மோதி திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

காரிலிருந்து இறங்கி வந்த செல்லூர் ராஜு!

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களின்றி தப்பித்துக் கொண்டனர். விபத்துகுறித்து அறிந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உடனடியாக காரிலிருந்து இறங்கி வந்து விபத்தைப் பார்வையிட்டார்.

அமைச்சரின் செயல் சூப்பர்!

தொடர்ந்து விபத்தில் சிக்கிய குடும்பத்தினரிடம் அரவனைப்போடு பேசி, அவர்களுக்கு மாற்றுக் காரை ஏற்படுத்தித் தந்துவிட்டு, அதன்பின்புதான் அங்கிருந்து அமைச்சர் செல்லூர் ராஜு புறப்பட்டுச் சென்றார். அமைச்சரின் இந்தச் செயல் நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி