ஆப்நகரம்

காமராஜர் பல்கலை.யில் இனி கார்பன் டெஸ்டிங் செய்யலாம்

தொடர்ந்து கடல் சார்ந்த தொல்லியல் ஆராய்ச்சிக்கான நிதியும் தமிழக அரசால் ஒத்துக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Nov 2020, 11:09 am
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கீழடியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூட்டின் வயதை கண்டறியும் ஆய்வுக்கூடம் அமைக்க நிதி விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
Samayam Tamil ma foi ka pandiyarajan


அதற்கு பதிலளித்த அமைச்சர், “உலக அளவிலான தொல்லியல் சார்ந்த (Nature Magazine) பத்திரிக்கையில் கீழடியில் தான் முதன்முதலாக 2650 ஆண்டு முன்பு நானோ டெக்னாலஜியை தமிழன் பயன்படுத்தி உள்ளான் என்பதை உலகம் அறிய பிரபலப்படுத்தியுள்ளது பெருமை கொள்ளவேண்டும்.

ரூசா நிதி ஒதுக்கீடு மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டது, அதனை தொடர்ந்து கடல் சார்ந்த தொல்லியல் ஆராய்ச்சிக்கான நிதியும் தமிழக அரசால் ஒத்துக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெரியாதவர்கள் அகழாய்விலா? ஐகோர்ட் கிடுக்கிப்பிடி!

தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கார்பன் டெஸ்டிங் தொழில்நுட்ப முறையை மேற்கொள்ள ஆய்வுகூடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். தற்போது கொரோனாவால் நிதி உதவிகளும் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் தமிழக அரசு ரூசா விடம் நிதியை பெற உறுதுணையாக இருக்கும்” என்று கூறினார்.

அடுத்த செய்தி