ஆப்நகரம்

பெண்களே உஷார்: வாகனத்தை உதைத்து செயின் பறிக்கும் கும்பல், ஒருவர் சிக்கினார்!

மதுரையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களின் வாகனத்தை உதைத்து தள்ளிவிட்டு நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 13 சவரன் தங்க நகை பறிமுதல்.

Samayam Tamil 21 Sep 2021, 9:03 pm
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தனியாக வாகனங்களில் நகை அணிந்து செல்லும் பெண்களை பின் தொடர்ந்து வாகனத்தை உதைத்து தள்ளி விட்டு பெண்கள் அவர்கள் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் தங்க செயின்களை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகை பறிமுதல் செய்துள்ளனர்.
Samayam Tamil பெண்களே உஷார்: வாகனத்தை உதைத்து செயின் பறிக்கும் கும்பல், ஒருவர் சிக்கினார்!


கடந்த சில மாதங்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியான வாகைகுளம் ,மேல உரப்பனூர், திருமங்கலம் சோழவந்தான் சாலை, விக்கிரமங்கலம், செக்கானூரணி, பெருமாள்கோவில்பட்டி, பெரியகட்டளை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை வழிப்பறி மற்றும் வழிப்பறி முயற்சி போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

குறிப்பாக நகை பறிகொடுத்த பெண்கள் அனைவருக்கும் கழுத்தில் முகங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் திருமங்கலம் டிஎஸ்பி முத்துக்குமார், ஆய்வாளர்கள் மாய ராஜலெட்சுமி, ராதா மகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை தேடி வந்தனர்.

மேலும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட போது அப்பகுதியின் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணையை தொடங்கினர் விசாரணையில் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் நாட்டார் பட்டியை சேர்ந்த நாககுமாரன் மகன் ராஜ்குமார் என்பது தெரிய வந்தது எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி