ஆப்நகரம்

மதுரை; மாநகராட்சி மேயரின் உருவ பொம்மையிடம் மனு அளித்த பொதுமக்கள்!

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 க்கு உட்பட்ட 20 வது வார்டில் உள்ள பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தர மனு அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்காததால் சோளக்காட்டு பொம்மையிடம் மனு அளித்து நூதான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Curated byமதுமிதா.M | Samayam Tamil 2 Jun 2023, 2:46 pm

ஹைலைட்ஸ்:

  • விளாங்குடி 2௦ வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள்

  • அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மனு

  • நடவடிக்கை மேற்கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

  • சோளக்காட்டு பொம்மையிடம் மனு அளித்த ஊர் பொதுமக்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்கிய பொதுமக்கள்
மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்கிய பொதுமக்கள்
விளாங்குடி 20-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள்
மதுரை மாநகராட்சி மண்டலம்-2க்கு உட்பட்ட விளாங்குடி 20-வது வார்டில் உள்ள வருமானவரி காலனி, காமாட்சிநகர், ராமமூர்த்தி நகர், பாரதியார் நகர்,செங்கோல் நகர், டெம்சி காலனி, சொக்கநாதபுரம்,பொன்நகர், பழைய விளாங்குடி மற்றும் விளாங்குடி மெயின் ரோடு உள்ளிட்ட வார்டு பகுதி முழுவதிலும்சாலை வசதி இல்லாத நிலையில் குடிநீர் மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையே நீடித்து வருகின்றது.
மதுரை-இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிவிப்பு; நீங்களும் அர்ச்சகர் ஆகலாம்!

மாநகராட்சி வார்டு கவுன்சிலர் நாகஜோதி
மேலும் இது தொடர்பாக மாநகராட்சி வார்டு கவுன்சிலர் நாகஜோதி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு முறை புகார் மனு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் இது தொடர்பாக முறையிட பட்டது. ஆனால் தற்போது வரை 20ஆவது வார்டு பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளரோ, மேயரோ நேரில் சென்று பொதுமக்கள் குறைகளை கேட்கவில்லை.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரின் உருவப் பொம்மை
இந்நிலையில் மாநகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு உறுப்பினர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரின் உருவப் பொம்மையை சுமந்து சென்று ஒவ்வொரு பொது மக்களிடமும் மனு பெறவைத்தார்.

மாமன்ற உறுப்பினர்
அதனை தொடர்ந்து முன்னதாக தங்களது வார்டு பகுதிக்கு மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரின் உருவ பொம்மை ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வை அணிவித்து அவர்களை மாமன்ற உறுப்பினர் வரவேற்றார்.

மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்கிய பொதுமக்கள்
மேலும் வீதி வீதியாக சென்று ஒவ்வொரு பொதுமக்களிடமும் அவரவர்களின் மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்குமாறு அறிவித்தனர். இதனையடுத்து பொதுமக்களும் தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை சோளக்காட்டு பொம்மைகளிடம் வழங்கினர்கள். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற இந்த நூதன போராட்டம் அந்த பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மாமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய போலீசார்
அதனையடுத்து நூதன முறையில் சோளக்காட்டு பொம்மை எடுத்துச் சென்ற மாமன்ற உறுப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என கூறி மீண்டும் திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய பொதுமக்கள் தங்கள் பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் இருந்து வருகின்றது.

மாநகராட்சி நிர்வாகம் என்பது பொம்மை போலஆனால் இது தொடர்பாக மாநகராட்சியிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது ஆனால் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் என்பது பொம்மை போல இருப்பது என்பதை காட்டும் வகையில் சோளக்காட்டு பொம்மையை ஆய்வு மேற்கொள்ள வைத்து அவர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
மதுமிதா.M
நான் மதுமிதா கணினி அறிவியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால் கடந்த 1 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றேன். க்ரைம், சினிமா, தேசிய செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. தற்பொழுது டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் தமிழில் பணியாற்றி வருகின்றேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி