ஆப்நகரம்

மதுரையில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

Samayam Tamil 4 Jul 2020, 5:09 pm
மதுரையில் ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு தளர்வுகள் அவ்ழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த கடைகளும் இயங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil madurai-lockdown


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை மற்றும் அதன் அருகமை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கையால் 5 ஆவது மாவட்டமாக மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 7 நாட்கள் நீட்டித்து ஜூலை 12ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எந்தக் கடைகளும் திறந்திருக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை
தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதல்வர் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரையில் இன்று முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சென்னைக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி