ஆப்நகரம்

மதுரையில் கொரோனா ஆபத்து மிகவும் தீவிரம்: என்ன செய்கிறது அரசு?

மதுரையில் 2ஆம் அலை காரணமாகப் பாதிப்பு மிக அதிகமாக உயரலாம் என கடும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. எனினும் சாதாரணமான சூழலே பெரும்பாலான இடத்தில் நிலவுகிறது.

Samayam Tamil 3 May 2021, 11:31 pm
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வலிகிறது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கை வசதிகள் கூட இல்லை.
Samayam Tamil மதுரையில் கொரோனா ஆபத்து மிகவும் தீவிரம்: என்ன செய்கிறது அரசு?


அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் மிக நீண்ட வரிசையில் 2சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலிலும் மக்கள் ஆபத்தை உணராமல் சர்வ சாதாரணமாகத் தினசரி பணிகளைச் செய்து வருகின்றனர்.

உணவகங்கள் பொட்டலங்களை மட்டுமே வழங்குகின்றன. அத்தியாவசிய பொருட்களை விற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில் சட்டவிரோதமாக ஏராளமான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுரைக்கு கொரோனா வைத்த கெடு 10 நாள்: எம்பி சு வெங்கடேசன் தெளிவான எச்சரிக்கை!

அதேபோல் மக்கள் எந்தவொரு அச்சமுமின்றி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் சர்வசாதாரணமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

அரசுப் பேருந்துகள் தொடங்கி எதிலும் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக கொரோனாவின் தீவிரம் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது எனத் தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி