ஆப்நகரம்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையா! - என்ன சொல்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர்?

தமிழகத்தில் இரண்டாவது அலை (கொரோனா) வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு-அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Samayam Tamil 24 Feb 2021, 6:52 pm
சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
Samayam Tamil C. Vijayabaskar


தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை என்ற மிகப்பெரிய வியூகத்தை தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு சில மாநிலங்களில் நோய் அதிகரிப்பை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இரண்டாவது அலை(கொரோனா) வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

படிப்பகமாக மாறிய பாழடைந்த கட்டிடம்... தலைமை ஆசிரியையான முன்னாள் மாணவி சாதனை

பிற மாநிலங்களில் நோய் அதிகரிப்பு உள்ளதால் தொடர்ந்து பொது மக்கள் முக கவசம் அணிவது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட முன் களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. அவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், எனவே முன்பதிவு செய்துகொண்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து கொடுக்கப்படும். அதற்கான மருந்துகள் தமிழக அரசிடம் இருப்பு உள்ளது மிக விரைவில் தொடங்கப்படும்.

அடுத்த செய்தி