ஆப்நகரம்

தமிழ்நாட்டின் அடுத்த கொரோனா தலைநகர் மதுரையா?

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.

Samayam Tamil 3 Jul 2020, 11:50 am
மதுரையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையிலிருந்து அனைத்துக் கடைகளும் மதியம் 2 மணிக்கே அடைக்கப்பட்டுவிடுகின்றன. பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவசியமில்லாமல் யாரும் நடமாட முடியாது. இருப்பினும் கொரோனா பரவல் மதுரையில் தொடர்ந்து அதிகரித்த்து வருவது மக்களையும் அரசையும் அச்சம் கொள்ள வைக்கிறது.
Samayam Tamil coronavairus cases madurai


ஜுன் 26ஆம் தேதி 1400 பேர் பாதிக்கப்பட்டிருந்த மதுரையில் ஜூலை 1 ஆம் தேதி நான்கு நாள்களில் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்து 2800ஆக உயர்ந்தது. சென்னையில் மே 2ஆம் தேதி 1300ஆக இருந்த பாதிப்பு மே 7ஆம் தேதி 2600ஆக உயர்ந்தது. அதேபோல் தற்போது மதுரையில் பாதிப்பு உயர்கிறது.

பாதிக்கப்படுபவர்கள் சதவீதம் 6.53ஆக இருக்கும் போது மதுரையில் 15 சதவீதமாக உள்ளது. “ஜுன் மாத மத்தியில் வைரஸ் பரவல் வேகம் சென்னையில் அதிகமாக இருந்தபோதுகூட மதுரையில் தீவிர பாதிப்பு இல்லாமல் இருந்தது. மே 16ஆம் தேதியிலிருந்து 150 பாதிப்புகள் அதிகரிக்க அதாவது இரட்டிப்பாக 25 நாள்கள் ஆகியுள்ளது. ஆனால் சென்னையில் 12 நாள்களில் இது நடந்தது” என்று தேசிய தொற்றுநோய் ஆய்வுக்கழக விஞ்ஞானி கூறியுள்ளார்.

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா? காவல் நிலையத்தில் நடந்த பேரம்!

தொற்று பரவலைத் தடுக்கவும், பாதிப்பு எண்ணிக்கையையேனும் குறைக்கவும் மதுரை மாவட்ட அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலிருந்து ஊர் திரும்பியவர்களாலேயே அதிக பாதிப்பு மதுரையில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. “ஒரே ஒரு வெடிப்பின் மூலம் இந்த பாதிப்புகள் இங்கு ஏற்படவில்லை. அவ்வப்போது கிராமப்புறங்களிலும் பாதிப்புகள் பதிவாகின்றன” என்று கொரோனா சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பி.சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையுடன் பலர் ஒப்பிடுகின்றனர். சமூக தொடர்பு, நெருக்கம் மதுரை மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. இருப்பினும் தொடர்புகளை ஆய்வு செய்ததில் குடும்ப ஒன்றுகூடல், இறுதி சடங்கு ஆகியவை மூலமே இங்கு அதிகமாக பரவுகிறது என மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னையிலிருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். சென்னையோ, மதுரையோ பெரிய வெடிப்பை சந்திக்கவில்லை. மதுரையில் உள்ள பரவை காய்கறி சந்தை மூலம் மிகச் சிறிய வெடிப்பு ஏற்பட்டது. பரவலுக்கு காரணமாக அது இருந்தபோதும் காய்கறி சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டும், விற்பனையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

கொரோனா: சென்னையைப் போல் மாறத் துடிக்கும் மதுரை!

ஜுன் 1ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 268 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இது மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் 1 சதவீதம் மட்டுமே ஆகும். ஒரு மாதம் கழித்து பாதிப்பு எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து 2858ஆக உள்ளது. இது மாநிலத்தில் 10 சதவீதம் ஆகும். அதே சமயம் மொத்த பாதிப்பில் சென்னை ஜுன் 1ஆம் தேதி 67 சதவீதம் கொண்டிருந்தது, ஜூலை 1ஆம் தேதி 64 சதவீதமாக குறைந்துள்ளது.

சென்னையில் அறிகுறிகள் இல்லாதவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தற்போது அவர்கள் வீட்டிலேயே தங்களை பார்த்துக்கொள்கின்றனர். மதுரையில் படுக்கைவசதிகளும், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பராமரிப்பாளர்களும் குறைவு என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதை வலுப்படுத்தி வருகிறோம். ஆரம்பத்திலேயே நாங்கள் அதிக சோதனைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகிறோம்” என்று சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி