ஆப்நகரம்

தாம்பூலம் வைத்து கொரோனாவை விரட்ட மதுரைக்காரர் சொல்லும் ஐடியா!

கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்குடன், முகக் கவசம் அளித்து தன்னார்வலர் ஏற்படுத்திய விழிப்புணர்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Samayam Tamil 10 Apr 2021, 10:41 pm
கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த நோயின் தீவிர காரணமாக, அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
Samayam Tamil தாம்பூலம் வைத்து கொரோனாவை விரட்ட மதுரைக்காரர் சொல்லும் ஐடியா!


எனினும் கொரானாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

குறிப்பாக முக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மதிச்சியம் செனாய் நகர்ப் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற தன்னார்வலர் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கொரோனா இரண்டாம் அலை... அமைச்சர் செஞ்ச தரமான சம்பவம்!

தாழ்பூ தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து இலவச முகக்கவசங்களை வழங்கி அணிந்து கொள்ள வலியுறுத்தினார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில், அதனை ஒட்டிய சாலைகளில் முகக் கவசம் அணியாத பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அடுத்த செய்தி