ஆப்நகரம்

2வயது மகள் கொலை: கணவன் மனைவி தற்கொலை, மதுரையில் சோகம்!

கடன் தொல்லையால் இரண்டு வயதுக் குழந்தையைக் கொலை செய்துவிட்டு தாய் மற்றும் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 29 Mar 2021, 7:49 am
மதுரை பந்தடி 5ஆவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நகை பட்டறையில் ஆசாரி ஆக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil 2வயது மகள் கொலை: கணவன் மனைவி தற்கொலை, மதுரையில் சோகம்!


இந்த நிலையில், இவருக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த வாணி என்ற பெண்ணை உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர். விஜயகுமார்- வாணி தம்பதிக்கு இரண்டு வயதில் ஹாசினி என்ற குழந்தை உள்ளது.

விஜயகுமாருக்கு கொரோனா காலம் என்பதால் வேலை சரிவரக் கிடைக்கவில்லை. இதற்கிடையே வறுமை காரணமாக விஜயகுமார், பல இடங்களில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள் தினமும் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகுமார் தன்னுடைய இரண்டு வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தன்னுடைய மனைவி வாணியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மதுரை அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா... பிளஸ் 2 மாணவர்கள் பீதி!

அதிகாலை வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குழந்தை உட்பட 3 பேரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி