ஆப்நகரம்

5 நாட்களுக்கு பின் தரிசனம்; கோவிலில் திரண்ட பக்தர்கள்!

தமிழகத்தில் 5 நாட்கள் தடைக்கு பிறகு கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர்.

Samayam Tamil 19 Jan 2022, 12:38 pm
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 14ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 5 நாளைக்கு மூடப் பட்டது.
Samayam Tamil திருப்பரங்குன்றம் முருகன்
திருப்பரங்குன்றம் முருகன்


தமிழக அரசு வழிபாட்டுத் தலங்களுக்கு கொரோனா 3-ஆம் அலை மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக, பொங்கல் மற்றும் தைப்பூச திருவிழா உட்பட அனைத்து சிறப்பு தினங்களுக்கும், பக்தர்கள் அனுமதியின்றி ,ஆகம விதிப்படி அனைத்து கால பூஜைகளும் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மார்கழி மாதத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி திருக்கோவில் 04.30 மணிக்கு எல்லாம் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், ஐந்து நாட்களாக கோவில்கள் மூடப்பட்டிருந்தது.

தற்போது மார்கழி மாதம் முடிந்ததால், மீண்டும் வழக்கம்போல் கோவில் நடை காலை 5.30-மணிக்கு திறக்கப்பட்டது. மேலும் மதியம் 01.00-மணிவரை செயல்படும்.

என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

அதே போல் மாலை 04.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 9.15 மணிவரை செயல்படும் என்று, கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 நாட்களுக்குப் பின் கோவில் திறக்கப்பட்டுள்ளதால்., வழக்கம்போல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களை, உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிந்த நபர்கள் மட்டுமே, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர்.

இன்னும் 4 வருஷம் நான் தான் எம்.எல்.ஏ; அதிகாரிகளை தெறிக்க விட்ட ஈஸ்வரன்!

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

அடுத்த செய்தி