ஆப்நகரம்

காப்பாற்றியது குற்றமா? ஆபத்தில் உதவியவருக்கு அரிவாள் வெட்டு

வெட்டுப்பட்டவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த நபருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

Samayam Tamil 7 Feb 2021, 12:24 pm
பழனி அருகே அரிவாளால் வெட்டுப்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தவரையும் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil drunk and attack


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் மைக்செட் கடை நடத்தி வருபவர் விஜயகாந்த். இவர் சனிக்கிழமை மாலை தனது கடையில் இருந்தபோது அங்கு வந்த அதே ஊரைசேர்ந்த பொன்ராசு என்பவர் குடிபோதையில் விஜயகாந்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் பொன்ராசு மறைத்து வைத்திருந்த நீளமான கத்தியால் விஜயகாந்தை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதனையடுத்து அங்குவந்த உறவினர்கள் ஆயக்குடி போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு விஜயகாந்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விஜயகாந்தை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு மருத்துவமனை வாயிலில் நின்றிருந்த உறவினர் ஜீவானந்தம் என்பவரை அங்கு மறைந்திருந்த பொன்ராசு தனது கையில் வைத்திருந்த நீளமான கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை... பெருந்துறையில் பெருந்துயர் சம்பவம்

இதனையடுத்து பொன்ராசுவிடமிருந்த கத்தியை ஜீவானந்தம் பிடுங்கியதை அடுத்து பொன்ராசு தப்பியோடிவிட்டார். இதனால் ஜீவானந்தம் கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி நகர போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் ஜீவானந்தத்தையும் மருத்துவமனையில் சிகிச்சைகக்காக அனுமதித்தனர்.

அப்போது காயமடைந்த விஜயகாந்த் மற்றும் ஜீவானந்தம் ஆகியோரின் உறவினர்கள் ஆயக்குடி போலீசாரின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும், விஜயகாந்தை தாக்கியபோது அளித்த புகாரின்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் ஜீவானந்ததத்தை காப்பாற்றி இருக்கமுடியும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய பொன்ராசுவை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி