ஆப்நகரம்

நீதியரசர் பெயரில் அதிமுக தலைவர்களின் ஆன்மா; இனி ஓபிஎஸ்க்கு தான் கட்சி- முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன்!

இந்த தீர்ப்பின் பிறகு அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாக செயல்படும் என மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 18 Aug 2022, 12:01 pm

ஹைலைட்ஸ்:

  • இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பதவி செல்லாது
  • ஓபிஎஸ் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு
  • அதிமுகவின் ஒன்றைக் கோடி தொண்டனின் வெற்றியாக தான் பார்க்க வேண்டும்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil mp
ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்
கடந்த மாதம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பதவி செல்லாது என்றும், முன்பிருந்த ஒருங்கிணைப்பாளர் இணை, ஒருங்கிணைப்பாளர் நடைமுறையே தொடரும் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் நிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது; இந்த தீர்ப்பிற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும், புரட்சித்தலைவர், தலைவியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அண்ணா திமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் நீதியரசர் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கிறார்

இபிஎஸ் தலையில் விழுந்த இடி; அதிமுக பக்கம் நெருங்கிய ஓபிஎஸ்; சொந்த ஊரில் நடக்கும் ஏற்பாடுகள்!

நீதியரசர் பெயரிலேயே எங்க கழகத்தின் தலைவர்களின் பெயரும் உள்ளது. ஆகவே இந்தத் தீர்ப்பை புரட்சித் தலைவியின் ஆன்மாவும், புரட்சித்த லைவருடைய ஆன்மாவும் இணைந்து கொடுத்த வழிகாட்டுதலாகவே நாங்கள் பார்க்கிறோம். காலம் என்பது அனைத்தையும் மாற்றும், மாற்றம் ஒன்றே மாறாதது, காலம் என்பது எல்லாவற்றையும் சரிப்படுத்தும், காலம் என்பது எல்லாவற்றையும் வழி நடத்தும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியானது, அதிமுகவின் ஒன்றைக் கோடி தொண்டனின் வெற்றியாக தான் பார்க்க வேண்டும். மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகிறோம் என அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி