ஆப்நகரம்

உண்மையை எழுதுனா தமிழ்நாட்டில் பிரச்சினை: ராம மோகன ராவ் ஓபன் டாக்!

சுயசரிதை எழுவேன், அதனால் பல பிரச்சினைகள் பலருக்கு எழும் எனவும், சுயசரிதையால் சில உண்மைகள் வெளிவரும் எனவும் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 20 Dec 2020, 11:37 pm
மதுரையில் ஹிந்து ஜனநாயக ஃப்ராண்ட் அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
Samayam Tamil உண்மையை எழுதுனா தமிழ்நாட்டில் பிரச்சினை: ராம மோகன ராவ் ஓபன் டாக்!
உண்மையை எழுதுனா தமிழ்நாட்டில் பிரச்சினை: ராம மோகன ராவ் ஓபன் டாக்!


முன்னதாக செய்தியாளர்களிடம் ராம மோகன ராவ் பேசியதாவது:
தமிழ்நாட்டில் கோயில்களை நம்பி பத்து லட்சம் குடும்பங்கள் உள்ளன. கோயில் பொருளாதாரத்தை நம்பிதான் இவர்கள் வாழ்கின்றனர்.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் மிகவும் அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை, மாத உதவித்தொகை கிடைக்க அரசிடம் வலியுறுத்துவேன். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது.

நாம் சமுதாய இயக்கமாகக் கலாச்சார இயக்கத்தையே நடத்துகிறேன். நான் சமுதாய பணியை மட்டுமே செய்கிறேன். தமிழ்நாட்டில் 42 சதவீத சமுதாயங்கள் அரசியலில் முன்னேறுவதற்கு வழிகாட்டுகிறேன். அரசியல் தொடர்பே இல்லாமல் அவர்கள் உள்ளனர்.

வியக்க வைத்த செல்லூர் ராஜு: அரசு விழாவில் அமைச்சர் சிறப்பான செயல்!

வாக்கு இயந்திரங்கள் சரியாக உள்ளன. வாக்கு இயந்திரங்கள் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் சுயசரிதை எழுதுவேன். அது பலருக்குப் பிரச்சினையை உருவாக்கும். இப்போது எல்லாருமே என்னைத் தவறாகப் பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். இடையில் தான் சுயசரிதை எழுதுவேன் என நகைச்சுவைக்காகச் சொன்னதாக முன்னாள் தலைமைச் செயலர் பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த செய்தி