ஆப்நகரம்

அன்பான போலீஸ், பணியின்போது மாரடைப்பால் மரணம்: மதுரையே சோகம்!

உசிலம்பட்டி அருகே பணியிலிருந்த காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2021, 10:11 am
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தினகரன். தேனி அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1996ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராகச் சென்னையில் பணியில் சேர்ந்து 2010ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்று எழுமலை காவல் நிலையத்திலும், மதுரை குற்றப்பிரிவு மற்றும் மதுவிலக்கு பிரிவிலும் பணியாற்றியவர். இப்போது மீண்டும் எழுமலைக்குக் கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகக் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil அன்பான போலீஸ், பணியின்போது மாரடைப்பால் மரணம்: மதுரையே சோகம்!
அன்பான போலீஸ், பணியின்போது மாரடைப்பால் மரணம்: மதுரையே சோகம்!


இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையத்தில் பணியிலிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சூழலில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல் ஆய்வாளரின் உடல் அவரது சொந்த ஊரான தேனி வெள்ளையம்மாள்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கினால் தூக்கு: சட்டத்தை மாற்ற கோர்ட்டுக்கு அதிகாரமில்லை!

காவலர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களிடமும் அன்பாகப் பழகி, பல சிக்கல்களையும் சுமுகமாகக் கையாண்ட ஒரு காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் உசிலம்பட்டி, எழுமலை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி