ஆப்நகரம்

தரமான சம்பவம்: ஐஏஎஸ் என அதிகாரிகளை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்த போலி ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 10 Nov 2020, 8:31 pm
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் என்பவருக்கு தொலைப்பேசி வாயிலாக அழைத்த மர்ம நபர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பிரிவிலிருந்து பேசுவதாகவும் தன்னுடைய பெயர் செந்தில்குமார் ஐஏஎஸ் என்றும் கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil தரமான சம்பவம்: ஐஏஎஸ் என அதிகாரிகளை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை!
தரமான சம்பவம்: ஐஏஎஸ் என அதிகாரிகளை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை!


மேலும் அந்த மர்ம நபர் அந்த உரையாடலின்போது, “நான் மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதை நம்பி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அந்த மர்ம நபரை காரில் அழைத்துக் கொண்டு மதுரை மாநகரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சூழலில் செந்தில்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் சென்னையில் உள்ள சுகாதாரத்துறைச் செயலருக்கு இவருடைய புகைப்படத்தை அனுப்பி சோதனை செய்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் போலியாக மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

பாபர் மசூதி இடிப்பு போல்... தேவருக்கு நினைவு இல்லம்: சர்ச்சை பேச்சு!

இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக தல்லாகுளம் காவல்துறையினருக்கு சோமசுந்தரம் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போலி ஐஏஎஸ் அதிகாரி போல் வந்தவரைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகன் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. செந்தில்குமார் மருத்துவ படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.

வேலை எதுவுமின்றி இருந்துவந்த செந்தில்குமார் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அவ்வப்போது உயர் அதிகாரிகள் எனக் கூறி ஒவ்வொரு துறை அதிகாரிகளைச் சந்தித்து ஊர் சுற்றி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து செந்தில் குமாரைக் கைது செய்த தல்லாகுளம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி