ஆப்நகரம்

சாத்தான்குளம் பிறகும் திருந்தவில்லை! ஆடு மேய்த்தவரை வனத்துறை சித்திரவதை...

மதுரை வாடிப்பட்டி அருகே வனப்பகுதிக்குள் ஆடு மேய்த்தாக விவசாயி மீது குற்றச்சாட்டுச் சுமத்தியுள்ள வனத்துறையினர், சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து அடித்து சித்திரவதை செய்துள்ளது.

Samayam Tamil 28 Dec 2020, 10:05 am
விவசாயி மீது இந்த தாக்குதலை 2 வனக்காவலர்தான் நிகழ்த்தினார்கள் என எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil சாத்தான்குளம் பிறகும் திருந்தவில்லை! ஆடு மேய்த்தவரை வனத்துறை சித்திரவதை...
சாத்தான்குளம் பிறகும் திருந்தவில்லை! ஆடு மேய்த்தவரை வனத்துறை சித்திரவதை...


இந்த சம்பவத்தால் விவசாயி படுகாயங்கள் அடைந்துள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சி பட்டி பகுதியில் வசித்து வரும் விவசாயி சுப்ரமணியன். இவர் தனது ஆடுகளை வனப்பகுதியின் எல்லையில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளார்.

இதையடுத்து ஆடுகளை அத்துமீறி யானைமலை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட்டதாகக் கூறி வனக்காவலர்களான நாகராஜ், மற்றும் இருளாண்டி ஆகியோர் விவசாயி சுப்பிரமணியனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இனி மதுரையிலிருந்து துபாய்க்கு எப்பனாலும் பறக்கலாம்!

மேலும் குறிப்பிட்ட பணத்தை தங்களிடம் கட்ட வேண்டும் எனக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வனக்காவலர்களின் விதித்த அபராதத்தை விவசாயி சுப்பிரமணி மறுப்பு தெரிவித்ததால் சுப்பிரமணியை வனக்காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விவசாயி சுப்பிரமணி பாலமேடு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விவசாயி சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் தாக்குதல் நடத்திய வனக்காப்பாளர்கள் 2பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடு மேய்த்த விவசாயியை வனக்காப்பாளர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி