ஆப்நகரம்

கொரோனா... முதல் தடுப்பூசி போடப்பட்டது இவருக்குத்தான்...

மதுரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முத்துமாரிக்கு தற்போது வயது 36 என்பது குறிப்பிடத்தக்கது

Samayam Tamil 16 Jan 2021, 10:43 am
தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இதனை மதுரையில் தொடங்கி வைத்தார்.
Samayam Tamil corona-medicine


அந்த வகையில், முதன்முதலாக முத்துமாரி என்பவருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சுகாதாரப் பணியாளர் முத்துமாரி. இவருக்கு இன்று முதலாவதாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் முத்துமாரிக்கு தற்போது வயது 36 என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர் மற்ற தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இடையில் 14 நாட்கள் இடைவெளி இருப்பது அவசியம்.

அடுத்த செய்தி