ஆப்நகரம்

மாட்டுத்தாவணி மார்கெட்டில் 200 எடை இயந்திரங்கள் பறிமுதல்!

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வியாபாரிகள் பயன்படுத்திய எடை இயந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 29 Apr 2022, 8:08 am
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் காலை 5 மணி முதல் தொழிலாளர்கள் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், இணை ஆணையாளர் சுப்ரமணியன் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையாளர் மெய்விழி செல்வி தலைமையில் 17 துனை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை மற்றும் பழச்சந்தை பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
Samayam Tamil mattuthavani Market


இதில் எடை இயந்திரங்களுக்கு வியாபாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை அரசு தரப்பில் வழங்கப்படும் முத்திரை பதித்து சான்றிதழ் வாங்காததால் அவர்களிடமிருந்து சுமார் 200க்கும் மேற்ப்பட்ட எடை இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ச்சியாக பல முறை வியாபாரிகளுக்கு அறிவிப்புகள் அறிவித்தும் அவர்கள் எடை இயந்திரங்களுக்கு முத்திரை பதிக்காததால் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டோம், இந்த எடை இயந்திரங்களை வாங்க நினைப்பவர்கள் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வந்து ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபதாரம் செலுத்திய பின்னர் அவரவர் எடை எந்திரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்