ஆப்நகரம்

மதுரையில் இவ்வளோ குழந்தைகள் பிறக்க என்னதான் காரணம்: இதோ முழு தகவல்!

தென் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 15 ஆயிரத்து 869 குழந்தைகள் பிறந்துள்ளது ஆர்டிஐ தகவல் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 11:24 pm
தென்மாவட்டத்தில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்ககூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க மகப்பேறுக்கு பிரத்தியோக வளாகம் செயல்படுகிறது.
Samayam Tamil மதுரையில் இவ்வளோ குழந்தைகள் பிறக்க என்னதான் காரணம்: இதோ முழு தகவல்!


இங்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தினமும் அனுமதிக்கப்பட்டு அதிநவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிகபட்சமாக கடந்த 2020ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 869 குழந்தைகள் பிறந்துள்ளது என்றும் சுகப்பிரசவம் மூலம் சுமார் 10 ஆயிரத்து 116 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் சுமார் 5 ஆயிரத்து 753 குழந்தை பிறப்பு என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2020ஆம் ஆண்டு 45 ஆயிரத்து 764 குழந்தைகள் பிறந்துள்ளது என்றும், கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பு விகிதத்தில் மதுரை மாவட்டம் தமிழ்நாடு அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி