ஆப்நகரம்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: சு.வெங்கடேசன் எம்.பி., தகவல்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என சு.வெங்கடேசன் எம்.பி., தகவல் தெரிவித்துள்ளார்

Authored bySM Prabu | Samayam Tamil 5 Feb 2023, 10:37 am
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொடர் கோரிக்கைகள் வைத்ததன் மூலம் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தியை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் பாதையில் அணுகுச்சாலை இல்லை. இதனால் திருமோகூர் செல்லும் பக்தர்களும் அந்த வழியில் இருக்கிற இராஜகம்பீரம், தாமரைப்பட்டி, இடையபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்களும் தேசிய நெடுஞ்சாலையை அடைய பல கிலோமீட்டர் தூரம் சுற்ற வேண்டியுள்ளது.

எனவே இச்சந்தில் அணுகுச்சாலை வேண்டும். அதே போல கொட்டாம்பட்டி ஒன்றியம் வளைச்சேரிப் பட்டி சந்திப்பில் மேம்பாலம் இல்லாததால் மிக அதிகமான விபத்துகள் நடக்கும் இடமாக அது இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற உயிரிழப்பு நிகழ்கிறது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது.


இவ்விரண்டு கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரிலும், கடிதத்தின் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்நிலையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி 30 தேதி நல்லதொரு பதிலை தந்திருக்கிறார்.

டி.பி.கஜேந்திரன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
“உங்களின் இரண்டு கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்தேன்; சாத்தியக் கூறு ஆய்வு" (Feasibility Survey) முன்னெடுக்கப்பட்டுள்ளது; அந்த ஆய்வின் அடிப்படையில், திருத்தங்கள் தேவைப்படின் அதையும் செய்து, நிறைவேற்றப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அமைச்சரின் இக்கடிதம் மதுரை தொகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாகும். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்தும் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி