மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்ததாக கூறப்படு் நவநீதகிருஷ்ணன் பக்கத்துவீட்டுகாரரிடம் கோழியை காணவில்லை என்று சண்டையிட்டுள்ளார். மது போதையில் தகராறு முற்றியதால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றது.
வாடிப்பட்டி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்றபோது ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மணிமாறன் என்ற காவலரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.
சசிகலாவுக்கு டஃப் கொடுக்கும் திருச்சி அதிமுக...அதிரடி தீர்மானம் நிறைவேற்றி கெத்து!
இதில் படுகாயமடைந்த காவலர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ வீரரான நவநீதகிருஷ்ணனை கைது செய்த வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு சென்ற காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிப்பட்டி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு சென்றபோது ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மணிமாறன் என்ற காவலரின் மூக்கை கடித்து துப்பியுள்ளார்.
சசிகலாவுக்கு டஃப் கொடுக்கும் திருச்சி அதிமுக...அதிரடி தீர்மானம் நிறைவேற்றி கெத்து!
இதில் படுகாயமடைந்த காவலர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணுவ வீரரான நவநீதகிருஷ்ணனை கைது செய்த வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு சென்ற காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.