தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையின்போது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அரசியல் கட்சிகளைச் சாடியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்: உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை.
அதேவேளைத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்குத் தவறான தகவல்களை வழங்கி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தேர்தலைத் தள்ளிப்போடுவதே நோக்கமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஊரக பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே, பொதுச் சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிடப் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெற வேண்டும். ஆகவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் 21 முறை தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை உருவாவதற்குக் காரணமாகச் சட்டசபைத் தேர்தல்தான் அமைந்துள்ளது.
இந்த சூழலில் மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபட்டால் கொரோனா தொற்று தீவிரமெடுக்க வாய்ப்பு உருவாகும். அதேவேளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதன் தீர்ப்பு வெளி வந்த பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்து வழக்கைத் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்: உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை.
அதேவேளைத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்குத் தவறான தகவல்களை வழங்கி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தேர்தலைத் தள்ளிப்போடுவதே நோக்கமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஊரக பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே, பொதுச் சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிடப் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெற வேண்டும். ஆகவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் 21 முறை தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தேர்தல்களை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை உருவாவதற்குக் காரணமாகச் சட்டசபைத் தேர்தல்தான் அமைந்துள்ளது.
இந்த சூழலில் மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபட்டால் கொரோனா தொற்று தீவிரமெடுக்க வாய்ப்பு உருவாகும். அதேவேளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதன் தீர்ப்பு வெளி வந்த பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்து வழக்கைத் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.