ஆப்நகரம்

பொதிகையில் சமஸ்கிருதம் வந்தா டிவியை ஆஃப் செய்யவும்: ஐகோர்ட் ஆலோசனை!

நாட்டில் பல பிரச்சினை உள்ளது, இதையெல்லாம் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்துள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 6:00 pm
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களைச் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறபித்துள்ளது.
Samayam Tamil பொதிகையில் சமஸ்கிருதம் வந்தா டிவியை ஆஃப் செய்யவும்: ஐகோர்ட் ஆலோசனை!
பொதிகையில் சமஸ்கிருதம் வந்தா டிவியை ஆஃப் செய்யவும்: ஐகோர்ட் ஆலோசனை!


மனுதாரருக்குத் தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம், அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம் எனக் கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற கிளை தலைமை நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் நீதிபதி, “இதனை விட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன” என்பதையும் குறிப்பிட்டிருந்தார். மனுதாரருக்குத் தேவையெனில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் நீதிமன்றம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடியுரிமை இலங்கைத் தமிழர்களுக்கு, எந்த கட்சி உறுதி கொடுக்கும்?: ஹென்றி திபென்

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி எம். எம் சுந்தரேஷ் அமர்வு, இந்த உத்தரவை அளித்துள்ளது.

அடுத்த செய்தி