ஆப்நகரம்

மதக் கலவரம்தான் பாஜகவின் மதுரை ஆயுதமா?: “முருகர் துணை”

ராமர் ரத யாத்திரை உள்ளிட்டவை மாநிலத்தில் பெரிதாக சூழலில், முருகனும் கந்த சஷ்டி கவசமும் தமிழ்நாட்டு அரசியலில் பெரியளவில் ஏற்படுத்தியது. இதையடுத்து முருகன் என்ற கடவுளின் விழாக்களை வைத்தே இந்துத்துவா அமைப்புகள் அரசியல் சேகரிக்கிறது தரவுகள் கூறுகின்றன.

Samayam Tamil 18 Dec 2020, 8:06 pm
இந்த சூழலில் நடந்து முடிந்த கார்த்திகை விழாவை வைத்து மதுரையில் இந்துத்துவா அமைப்புகள் மத ரீதியான பிரச்சினையைக் கிளப்பப் பார்க்கிறது. ஆம், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து-முஸ்லிம் மதத்தினருக்கு இடையே எப்போதோ ஏற்பட்ட சண்டையை மீண்டும் இந்துத்துவா அமைப்புகள் உருவாகிறது என போலீசாரே குற்றம்சாட்டும் அளவுக்கு அரசியல் ஆட்டங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil hindutva bjp tries to score using religious fight using thiruparankundram karthigai deepam
மதக் கலவரம்தான் பாஜகவின் மதுரை ஆயுதமா?: “முருகர் துணை”



இப்போதைய அரசியல் இதை வைத்துத்தான்!

திருக்கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த முறை முன்னாட்களில் மலைமேல் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் நடத்தப்பட்டு வந்தது. அதாவது 1967ஆம் ஆண்டு வரை இந்த முறையில்தான் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றமும் அங்குள்ள தர்காவும்!

இந்த காசிவிஸ்வநாதர் கோயில் செல்லும் வழியில் முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான தர்கா ஒன்றும் உள்ளது. அதற்கென தனி வரலாற்றுச் சான்றும் உள்ளது. இந்த தர்காவைக் கடந்துதான் கார்த்திகை தீபம் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.

கலவரத்தை தவிர்ப்பதுதானே சரி..!

அதன்பின் இந்து-முஸ்லிம் மதத்தினரிடையே இருந்த நட்பில் கலகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால், கோயில் நிர்வாகம் கார்த்திகை தீபத்தை மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றத் தொடங்கியது. இந்த பிள்ளையார் கோயில் முஸ்லிம் தர்காவிற்கு முன்பாகவே உள்ளது.

இந்துத்துவா அரசியல் கலவரத்தை தூண்டுமா..?

இப்படி 30 ஆண்டுகளாக புதிய வழக்கமாக மாற்றப்பட்ட வழிபாட்டு முறையை வைத்துத்தான் மதுரையில் இந்துத்துவா அமைப்புகள் அரசியல் செய்ய தொடங்கியுள்ளன. திருக்கார்த்திகை நேரத்தில் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

கலவரம் ஏற்பட்டாலும் கவலையில்லை என நடவடிக்கைகள்!

அப்படி காசிவிஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றினால், நிச்சயம் அது மதக் கலவரத்தைத் தூண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்து அமைப்புகள் பிடிவாதம் பிடிக்கின்றன. கலவரம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, என இந்து மத அமைப்புகள் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.

மக்களுக்கு தேவை நிம்மதிதான் அதை எந்த அரசியல் முறை கற்றுக் கொடுக்கும்?

சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் கார்த்திகை தீபத்தைக் கொண்டு சென்று அங்கு அதை ஏற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும் இந்த முயற்சியைக் கைவிடாத இந்து அமைப்புகள் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளையே எடுத்து வருகின்றன. இதுகுறித்து மக்கள், “மக்களின் பிரிவினையை வைத்து சண்டை ஏற்படுத்தாமல், ஒற்றுமையை உறுதி செய்தால், அரசியலில் தன்னால் லாபம் ஏற்படும்” என்கின்றனர்.

அடுத்த செய்தி