ஆப்நகரம்

சமையல்காரருக்கு பாலியல் தொல்லை: ஐடி ஊழியர் அடித்து கொலை!

மதுரையில் மென்பொறியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கைக்குக் கட்டாயப்படுத்தியதால் அடித்துக் கொலை செய்ததாக வடமாநில இளைஞர் பகிர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Samayam Tamil 21 Dec 2020, 3:59 pm
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமரன் தாஸ். வயது 42. இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டிய சூழல் இருந்துள்ளது.
Samayam Tamil சமையல்காரருக்கு பாலியல் தொல்லை: ஐடி ஊழியர் அடித்து கொலை!
சமையல்காரருக்கு பாலியல் தொல்லை: ஐடி ஊழியர் அடித்து கொலை!


இதன் காரணமாக மதுரை உத்தங்குடி பகுதியில் தனியாக வீடு எடுத்து பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சமையல் பணிக்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம் ஆனந்த் கௌதம் என்ற இளைஞரை அழைத்து வந்துள்ளார் குமரன் தாஸ்.

இந்த சூழலில் வடமாநில இளைஞரிடம் குமரன் தாஸ் வலுக்கட்டாயமாக உடலுறவு வைக்க முயன்றுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த வட மாநில இளைஞர், குமரன் தாஸை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டார் எனக் கூறப்பட்டது.

மேலும் அந்த இளைஞர், குமரன் தாஸ் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையைத் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த குமரன் தாஸ் உடலைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜாஜி அரசு மருத்துவமனை பாதி சிகிச்சையில் இளைஞரை துரத்தி விட்டதா..?

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கொலை செய்துவிட்டு வடமாநிலம் செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்தார் என்றும் அப்போது ராம் ஆனந்தை போலீசார் அதிரடியாகக் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி