பழனியை அடுத்த பழைய ஆயக்குடி 6வது வார்டு பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் என்பவரின் மகன் ராம்குமார். இவர் குஜராத்தில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். பழைய ஆயக்குடியைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தர்ஷா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராம்குமார் பைனான்ஸில் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பல பெண்களை ஏமாற்றி பெண்களின் வாழ்க்கையில் விபரீத விளையாட்டு விளையாடி உள்ளார்.
மேலும் அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று கணவன் இல்லாத பெண்கள், தனியாக இருக்கும் பெண்கள், பணத்திற்கு ஆசைப்படும் பெண்கள் ஆகியோரை நன்கு அறிந்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
தடுப்பூசி முகாம்... பொதுமக்களுக்கு அமைச்சரின் செம அட்வைஸ்!
அதற்கு மீனா சம்மதிக்காததால், அவரை நந்தவனப்பட்டி அருகே வைத்து சரமாரியாக தாக்கி தாலியை அறுத்து நகைகளை பிடுங்கி சென்றுள்ளார். உடலில் காயங்களுடன் காணப்பட்ட மீனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மீனா ஆயக்குடி காவல் நிலையம் சென்று புகார் தரவே போலீசார் புகார் எடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் புகார் எடுக்க மறுத்த ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உடனே இதனை விசாரித்து தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் மோசடி நாயகன் ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரி உள்ளார்.
மேலும் அவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று கணவன் இல்லாத பெண்கள், தனியாக இருக்கும் பெண்கள், பணத்திற்கு ஆசைப்படும் பெண்கள் ஆகியோரை நன்கு அறிந்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
தடுப்பூசி முகாம்... பொதுமக்களுக்கு அமைச்சரின் செம அட்வைஸ்!
அதற்கு மீனா சம்மதிக்காததால், அவரை நந்தவனப்பட்டி அருகே வைத்து சரமாரியாக தாக்கி தாலியை அறுத்து நகைகளை பிடுங்கி சென்றுள்ளார். உடலில் காயங்களுடன் காணப்பட்ட மீனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மீனா ஆயக்குடி காவல் நிலையம் சென்று புகார் தரவே போலீசார் புகார் எடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் புகார் எடுக்க மறுத்த ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உடனே இதனை விசாரித்து தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் மோசடி நாயகன் ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரி உள்ளார்.