ஆப்நகரம்

மதுரையைத் தகர்க்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம்?: என்ஐஏ சோதனையில் திடுக்கிடும் ஆதாரங்கள்!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்புடைய 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் என்ஐஏ 48மணி நேரம் தொடர் சோதனை நடத்தி வருகிறது. கணினி ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட 22வகையான டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 26 Jul 2021, 5:24 pm
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா(எ)சரவணகுமார் என்பவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி தனது முகப்புத்தக பக்கத்தில் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கப்படுவதாகச் சர்ச்சைக்குரிய பதிவுகள் சிலவற்றைப் பகிர்ந்திருந்தார்.
Samayam Tamil மதுரையைத் தகர்க்க ஐஎஸ்ஐஎஸ் திட்டம்?: என்ஐஏ சோதனையில் திடுக்கிடும் ஆதாரங்கள்!


மேலும் அதில் ஹிலாபத் என்ற தனிநாடு உருவாக்கப்படும் எனவும், இரு சமூகத்தினரிடையே பிரிவை ஏற்படுத்தும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஹிஜாபுல் தாஹிர் என்ற பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாகவும் அந்த பதிவுகள் அமைந்திருந்தன. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தெப்பக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அப்துல்லா(எ)சரவணகுமார் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கு மே 21ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

கீழடியில் முதன்மைச் செயலாளர் அதிரடி ஆய்வு: அருங்காட்சியகம் விரைவில் திறப்பு!
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அப்துல்லா(எ)சரவணகுமாரின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் நேற்றைய முன்தினம் முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 48மணி நேரமாக மதுரை, தேனி, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த அப்துல்லா(எ)சரவணகுமார் தொடர்பிலிருந்த 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் லேப்டாப், மொபைல் போன், ஹார்டு டிஸ்க், மெமரி கார்டு, பென் ட்ரைவ், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவான புத்தகங்கள் என 22வகையான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இப்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அடுத்தடுத்த விசாரணையைத் தீவிரப்படுத்தவுள்ளனர்.

அடுத்த செய்தி