ஆப்நகரம்

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி: மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் அறிக்கையின் அடிப்படையில் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 12 Apr 2023, 8:12 am

ஹைலைட்ஸ்:

  • புதுக்கோட்டை மாவட்டம், மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மனு
  • மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
  • மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Jallikattu
Jallikattu
புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தூத்துக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாடு: ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கும் அவல நிலை-கண்டு கொள்ளுமா தமிழக அரசு?
ஜல்லிக்கட்டு போட்டி
அதில், "புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார், ஸ்ரீ கரளய மருத அய்யனார் என்ற பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் போது ஆலயத் திருவிழாவை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டாடுவது வழக்கம். மேலும் திருவிழாவின்போது மாங்குடி, மண்ணவேல்மாபட்டி, ஆயிபட்டி, அகரப்பட்டி ஆகிய கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.
அடிப்படை வசதிகள்
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு வருகின்ற 15.04.2023 தமிழ் சித்திரை தினத்தை முன்னிட்டு கோவில் திருவிழாவினை நடத்தி மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசு ஆணைப்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், ஜல்லிக்கட்டுக் குழுக்களை அமைத்து, பாதுகாப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி 01.03.2023 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேவையான விசாரணையை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு வருவாய் கோட்ட அலுவலர், தாசில்தாரை நியமித்தார்.

நிலுவை
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்ட மனு அடிப்படையில் போட்டி நடைபெறும் மன்னவேலம்பட்டி கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஜல்லிக்கட்டு விழாவை முழுமையாக நடத்த அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தாசில்தார் அனுப்பிய மேற்படி அறிக்கை வருவாய் கோட்ட அலுவலரிடம் நிலுவையில் உள்ளது.

செலவு
இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தேதி நெருங்கி வருகிறது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளோம், 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும் நிகழ்விற்காக பெரும் தொகையைச் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி வழங்காமல் காலதாமதம் செய்வதால் கிராம மக்கள் அனைவரும் கடும் மனவேதனைக்கும், சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

அனுமதி
எனவே, புதுக்கோட்டை மாவட்டம், மன்னவேலம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரிய மனுவை விரைவாக பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்‌‌.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கோவை: நடிகர் சத்தியராஜின் சகோதரியின் தோட்டத்து வீட்டில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டியானை உயிரிழப்பு
உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
அப்போது நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர் அறிக்கையின் அடிப்படையில் மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி