ஆப்நகரம்

விதிமீறி மதுரை டோல்கேட்டில் பணம் வசூல் 500 பேர் முற்றுகையிட்டு நியாயம் கேட்பு: பெரும் பதற்றம்!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன கட்டணம் விதிவிலக்கு இருந்தும், கட்டாய வசூலில் ஈடுபடும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 25 Nov 2021, 3:04 pm
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் ஆவசம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக 500க்கும் மேற்பட்டர் வழிமறித்து நிறுத்தி அமர்ந்து போராட்டத்தின் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil விதிமீறி மதுரை டோல்கேட்டில் பணம் வசூல் 500 பேர் முற்றுகையிட்டு நியாயம் கேட்பு: பெரும் பதற்றம்!


மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்தி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேபோல் திருமங்கலம் நகர் பகுதியில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு அடிக்கடி கட்டணம் கேட்டு வசூல் செய்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் ராஜபாளையம் டி கல்லுப்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சுங்கச்சாவடியை பயன்படுத்துவதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை அடுத்து திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இலங்கை தமிழருக்காக இவ்வளோ செய்கிறாரா அமைச்சர் பிடிஆர்... அவரே சொன்ன விஷயங்கள்!
எனினும் கடந்த இரு தினங்களாக டி கல்லுப்பட்டி பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி வசூல் செய்து வந்துள்ளனர். இதனால் இங்கு அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் டி கல்லுப்பட்டி வாடகை வாகன உரிமையாளர்கள் பொதுமக்கள் சுங்கச்சாவடி பகுதியில் லாரிகளை நிறுத்தி தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி அடிக்கடி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அடாவடி செய்வது தொடர் கதையாக உள்ளது.

இந்த முற்றுகை போராட்டம் கடந்த 2 மணி நேரமாக நீடித்த நிலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த செய்தி